சினிமா

மகள் நடிகை ஆனது எனக்கு பிடிக்கவில்லை: புலம்பும் சயீப் அலிகான்

Published On 2017-06-19 09:58 GMT   |   Update On 2017-06-19 09:59 GMT
மகள் நடிகை ஆனது எனக்கு பிடிக்கவில்லை என்று பாலிவுட் நடிகர்களில் ஒருவரான சயீப் அலிகான் தெரிவித்துள்ளார்.
கரீனாகபூரை 2-வது திருமணம் செய்து இருப்பவர் இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கின் மகள் சாரா சுஷாந்சிங். இவர் ‘ரஜ்புட்’ படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.

மகள் நடிகை ஆனது பிடிக்கவில்லை என்பதை சயீப் அலிகான் இப்படி கூறுகிறார்.

“சாரா படித்த படிப்புக்கு அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கலாம். அதை விட்டு விட்டு நடிக்கும் இந்த பிழைப்பு எதற்கு? அதற்காக நடிப்புத்தொழிலை நான் குறை சொல்லவில்லை.



நடிப்பு நிலையான தொழில் அல்ல. நடிப்பவர்கள் அனைவரும் எப்போதும் பயத்துடன் வாழும் நிலை உள்ளது. நன்றாக நடித்தாலும் வெற்றி பெற முடியும் என்று கூற முடியாது. நிலையற்ற தன்மை உள்ள இந்த வாழ்க்கையை பிள்ளைகள் தேர்வு செய்ய வேண்டும் என்று எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் என் மகள் சாராவுக்கு நடிகையாவது தான் பிடித்து இருக்கிறது. அவர் எது பற்றி கேட்க வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். நாங்கள் மற்ற வி‌ஷயங்கள் பற்றி பேசுவது போல படங்களை பற்றியும் பேசுகிறோம்”.

Tags:    

Similar News