சினிமா

ஐஸ்வர்யா- சவுந்தர்யா இருவரும் திறமைசாலிகள்: தனுஷ்

Published On 2017-06-12 09:52 GMT   |   Update On 2017-06-12 09:52 GMT
திரைப்படம் இயக்குவதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் திறமைசாலிகள் என தனுஷ் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை மேலும் விரிவாக பார்ப்போம்...
தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘3’ படத்திலும், மைத்துனி சவுந்தர்யா இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சினிமா உலகத்துக்கு வந்தது பற்றி தனுஷ் அளித்த பேட்டியில், “எனக்கு முதலில் சினிமா பற்றி தெரியாது. எனவே இந்த துறைக்கு வரவிரும்பவில்லை. நானாக சினிமாவுக்கு வர விரும்பியதில்லை. குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் வந்தேன்.சில ஆண்டுகள் கழித்து இது தான் என் தொழில். சினிமா தான் எனக்கு என்று கடவுள் எழுதி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


ஐஸ்வர்யா, சவுந்தர்யா இயக்கத்தில் நடித்தது பற்றி தனுசிடம் கேட்டபோது, “இரண்டு பேருமே திறமையானவர்கள். இருவரும் சூப்பர் ஸ்டாரின் மகள்கள். கலை நுணுக்கம் அறிந்தவர்கள்” என்று பதில் அளித்திருக்கிறார்.
Tags:    

Similar News