சினிமா

நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகியாக நடிக்கும் நமீதா

Published On 2017-05-29 05:35 GMT   |   Update On 2017-05-29 05:35 GMT
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நமீதா தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மியா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். இவர்கள் மலையாளத்தில் 'ஸ்பீடு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்களாவர்.

மேலும், இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, 'மியா' மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் - மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் மியா படத்தின் கதை.



கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளனர்.

இப்படத்தின் பெரும்பாலன காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மியா திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை 'இ' ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரித்துள்ளார்.
Tags:    

Similar News