சினிமா

‘தொண்டன்’ படம் பார்க்கவந்த பொதுமக்களுக்கு இலவச நீர்மோர், இளநீர் கொடுத்து அசத்திய ரசிகர்கள்

Published On 2017-05-26 09:42 GMT   |   Update On 2017-05-26 09:42 GMT
சமுத்திரகனி நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தொண்டன்’ படத்தை பார்க்க வரும் பொதுமக்களுக்கு ரசிகர்கள் இலவச நீர் மேர், இளநீர் கொடுத்து அசத்தியுள்ளனர்.
சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ‘தொண்டன்’. இப்படத்தில் விக்ராந்த், சுனைனா, கஞ்சா கருப்பு, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 300 திரையரங்குக்கும் மேல் வெளியாகியிருக்கும் இப்படத்தின் மீதான விமர்சனங்கள் எல்லோரும் பாராட்டும்படியாகவே அமைந்திருக்கிறது.

‘அப்பா’ படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. திரையரங்கிலும் ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமுடன் வந்து படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.



சென்னையில் முக்கியமான திரையரங்கமாக கருதப்படும் உதயம் திரையரங்கில் ‘தொண்டன்’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. படத்தை பார்க்க வந்த பொதுமக்களுக்கு ‘தொண்டன்’ படத்தின் ரசிகர்கள் இலவசமாக நீர் மோரும், இளநீரும் வழங்கினர். ‘தொண்டன்’ ரசிகர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்களும் கிடைத்துள்ளது.



இப்படத்தை வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் சார்பில் சமுத்திரகனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 
Tags:    

Similar News