சினிமா

இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து

Published On 2017-04-27 08:58 GMT   |   Update On 2017-04-27 10:20 GMT
இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக பாலிவுட் இயக்குநரும், `பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான கரன் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கும் `பாகுபலி 2' உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. `பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று படத்தின் ப்ரீமியர் காட்சியை திரையிட படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி இன்று இரவு வெளியாகவிருந்த ப்ரீமியர் காட்சி ரத்து செய்யப்படுவதாக பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், `பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான கரன் ஜோஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



பாலிவுட்டின் பிரபல நடிகர் வினோத் கண்ணா உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக `பாகுபலி 2' படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Similar News