சினிமா

சூர்யாவுடனான தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்ட இயக்குநர் ஹரி

Published On 2017-04-26 07:32 GMT   |   Update On 2017-04-26 07:32 GMT
சூர்யாவுடனான தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் ஹரி தகவல் தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வெளியாகும் என இயக்கநர் ஹரி கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து தான் படம் இயக்கப்போவதாகக் ஹரி தெரிவித்துள்ளார். ஆனால், அந்த படம் ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் இல்லை என்றும், புதிய கதையொன்றில் இருவரும் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஹரி பிசியாக இருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் சாமி 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.



இப்படத்தை முடித்த பிறகு சூர்யா படத்தின் வேலைகளைத் தொடங்க இருக்கிறார் ஹரி. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா அதன்பிறகு, ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிப்பார்.

அதன்பின்னர் 5 அல்லது 6 வருடங்கள் கழித்து சிங்கம் படத்தின் 4-வது பாகம் வெளியாகும் என்று ஹரி முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News