சினிமா

மதுர வீரனாக களமிறங்கும் சண்முகபாண்டியன்

Published On 2017-04-23 05:15 GMT   |   Update On 2017-04-23 05:16 GMT
விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் அடுத்ததாக ‘மதுர வீரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து  ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சண்முகபாண்டியன் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தையா இயக்கவிருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ‘மதுர வீரன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.



இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News