சினிமா

ரூ.2 கோடி மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2017-04-21 05:23 GMT   |   Update On 2017-04-21 05:23 GMT
ரூ.2 கோடி மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
அமெரிக்க இந்தியரான ஆதிநாராயணன் என்பவரிடம் ரூ.2 கோடியே 18 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, நடிகர் வாலி என்ற பசீர், நாகநாதசேதுபதி, முரளிதரன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ரித்தீஷ், நாகநாதசேதுபதி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ரித்தீஷ் உள்பட 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இதைதொடர்ந்து ரீத்தீஷ் உள்பட 2 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News