சினிமா

சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்

Published On 2017-04-17 06:07 GMT   |   Update On 2017-04-17 06:07 GMT
நடிகர் சரத்குமார் நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு ‘ரெண்டாவது ஆட்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் குறித்த முழு தகவல்களை கீழே பார்ப்போம்.
சமீபகாலமாக புதுமுக இளம் இயக்குனர்கள் இயக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட்டாகி வருகின்றன. ‘துருவங்கள் பதினாறு’, ‘8 தோட்டாக்கள்’ என்ற கிரைம் திரில்லர் பின்னணியில் உருவான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டன. அதே கிரைம் திரில்லர் பாணியில் இளம் இயக்குனர் ஒருவர் சரத்குமாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

பிரித்வி ஆதித்யா என்ற இளம் இயக்குனர்தான் அவர். இவர் இயக்கும் அந்த படத்திற்கு ‘ரெண்டாவது ஆட்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் பிரித்வி கூறும்போது, “என்னுடைய கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத்குமார்தான் என்று என் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருமே கூறினர்.  அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளது.



இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் 'ரெண்டாவது ஆட்டம்' முழுவதுமாக பூர்த்தி செய்யும்.

அதோடு சரத்குமாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது" என்று உற்சாகத்துடன் கூறினார்.

இப்படத்தை பிக் பிரிண்டர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜுன் மாதம் முதல் தொடங்கவுள்ளனர். 

Similar News