சினிமா

தங்க சங்கலி அணிவித்து இயக்குனரை பாராட்டிய எம்.எஸ்.பாஸ்கர்

Published On 2017-04-09 06:34 GMT   |   Update On 2017-04-09 06:34 GMT
8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனருக்கு எம்.எஸ்.பாஸ்கர் தங்க சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘8 தோட்டாக்கள்’ படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரங்களும் பேசப்பட்டாலும், குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும், அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

திரைப்பட நடிகர்கள், இயக்குனர், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலரும் எம்.எஸ்.பாஸ்கரை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு, அவருடைய நடிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் உற்சாகம அடைந்த எம்.எஸ்.பாஸ்கர் தன்னுடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை வெளிக்கொண்டு வர காரணமாக இருந்த இயக்குனர் ஸ்ரீகணேஷை பாராட்ட முடிவு செய்து தனது வீட்டுக்கு வரவழைத்தார்.



இயக்குனர் ஸ்ரீகணேஷும், பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்துகொள்ளத்தான் எம்.எஸ்.பாஸ்கர் தன்னை அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்துள்ளார். வந்தவருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதத்தில் எம்.எஸ்.பாஸ்கர் தங்க சங்கிலி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்து பாராட்டியுள்ளார். இதனால், இயக்குனர் ஸ்ரீகணேஷ் ரொம்பவும் நெகிழ்ந்து போயுள்ளார். 

Similar News