சினிமா

இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்

Published On 2017-03-29 08:18 GMT   |   Update On 2017-03-29 08:18 GMT
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது தனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’ என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ படங்களில் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். தற்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில்  அவருடைய ஜோடியாக நடித்துள்ள அவர் அடுத்து விஜய்யின் புதிய படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

‘விவேகம்’ படத்தில் அஜித்தின் மனைவியாக குடும்பபெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். அதில் குடும்பம் சார்ந்த சென்டிமெண்ட்,  ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு உண்டு. அடுத்து விஜய் படத்தில் நடிக்கிறேன்.



விஜய்யுடன் நடிக்கும் படங்களில் எனக்கு எப்போதுமே வெயிட்டான வேடம் கிடைத்து வருகிறது. அதுபோல இந்த படத்திலும்  எனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த படத்திலும் நான் அவருடைய காதலிதான். என்றாலும், முக்கியமான  வேடம். ஆரம்பத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் புதுமையாக இருக்கும்.

அதுபோல் வித்தியாசமான சூழலில் எங்களுக்குள் காதல் மலர்வது போல காட்சிகள் உள்ளன. விஜய்யுடன் நான் நடிக்கும்  காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன. நான் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.

இந்த 2017-ம் ஆண்டு தமிழின் முன்னணி நாயகர்களான விஜய், அஜீத் ஆகியோருடன் நடிப்பதை ஜாக்பாட் பரிசுபோல  உணர்கிறேன்’’ என்றார்.

Similar News