சினிமா

`2.ஓ' படத்தில் முக்கிய பணிகள் நிறைவால் ஷங்கர் எடுக்கும் அதிரடி முடிவு

Published On 2017-03-29 07:17 GMT   |   Update On 2017-03-29 07:17 GMT
ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் `2.ஓ' படத்தின் முக்கிய பணி ஒன்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.ஓ'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக  நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 



நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக புதிய தகவல்  ஒன்று கிடைத்துள்ளது. இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமிருப்பதால் இப்படத்தின் போஸ்ட்  புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி ரிலீசாக வெளிவர இருக்கிறது. `3டி' வடிவிலும்  வெளிவர இருக்கும் இப்படத்தை, ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியிட திட்டமிட்ட படக்குழு அதுகுறித்த பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News