சினிமா

`சங்கமித்ரா' படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

Published On 2017-03-29 05:33 GMT   |   Update On 2017-03-29 05:33 GMT
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள `சங்கமித்ரா' படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகி உள்ளார். அவர் யார்? விலகியதற்கான காரணம் என்னவென்பதை கீழே பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக  உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101வது படமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்க  உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும்  அதிகரித்து வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து  வருகின்றனர். 



இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் படக்குழு,  ஸ்ருதி ஹாசனை ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆக மிகப்ரெிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாக உள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருந்த, `பஜ்ரோ மஸ்தானி' பட  புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குநரான  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் `பத்மாவதி' படத்தில் பிசியாக உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளதால், சங்கமித்ராவில் தன்னால் பணியாற்ற முடியவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார். 

`சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் முதற்பாதியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News