சினிமா

கணவரை பிரிந்த துக்கம்: அமலாபாலின் அடுத்த அதிரடி முடிவு

Published On 2017-03-28 07:51 GMT   |   Update On 2017-03-28 07:51 GMT
கணவரை பிரிந்த துக்கத்தில், நடிகை அமலாபால் மன அமைதிக்காக தினமும் யோகா செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம்  ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக அமலாபால்  நடிக்கிறார்.

இயக்குனர் சரண்தேஜ் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இது இவர் இயக்கி நடிக்கும் முதல் தெலுங்கு  படம். இந்த படத்தில் அமலாபாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் வேடத்தில் சினேகா உல்லல் நடிக்கிறார்.



இதற்கிடையே அமலாபால் மன நிம்மதிக்காக யோகா, தியானம் ஆகியவற்றில் அமலாபால் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.  தினமும் யோகா, தியானம் ஆகியவற்றை தவறாமல் செய்து வருகிறார். இதனால் மன அமைதி கிடைப்பதாகவும், கவலைகளை  மறக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

அமலாபால் தினம் காலையில் விதம் விதமாக யோகாசனம் செய்யும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.  அதில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து யோகாசனம் செய்வதை வற்புறுத்தி இருக்கிறார்.

Similar News