சினிமா

சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தல்: போட்டியில் இருந்து ஒரு அணி விலகல்

Published On 2017-03-25 08:04 GMT   |   Update On 2017-03-25 08:04 GMT
சவுத் இந்தியன் பிலிம்சேம்பர் தேர்தலில் போட்டியில் இருந்து ஒரு அணியினர் விலகி உள்ளனர். தேர்தலில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
சவுத்இந்தியன் பிலிம் பேர் ஆப் காமர்ஸ் அமைப்புக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தலைவர், இணை செயலாளர்,  பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம்  தலைமையில் ஒரு அணியும், எல்.சுரேஷ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘இந்த தேர்தலில் முறைகேடு நடக்கிறது. தேர்தல் அதிகாரி நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை’ என்று கூறி  ரோகிணி ஆர்.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மற்ற உறுப்பினர்களும் தேர்தலை  புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News