சினிமா

பணத்துக்கு ஆசைப்பட்டு கவர்ச்சி நாயகி பட்டியலில் சேரமாட்டேன்: ராகுல் பிரீத்சிங் பேட்டி

Published On 2017-03-24 15:11 GMT   |   Update On 2017-03-24 15:11 GMT
கவர்ச்சி நாயகி பட்டியலில் தான் சேரமாட்டேன் என்று நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
‘தடையறதாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய தமிழ்படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத்சிங். எதிர்பார்த்தபடி வாய்ப்புகள்  வராததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு முன்னணி நடிகையானார். இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறார். இந்தி பட  வாய்ப்பும் வந்திருக்கிறது.

தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கு ராகுல் பிரீத்சிங் மறுத்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்...



“ஆரம்பத்தில் படங்களில் நான் கவர்ச்சியாக நடித்தது உண்மைதான். அப்போது எனக்கு நடிப்பில் சரியான புரிதல் இல்லை.  எப்படியாவது மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்று நினைத்ததால் அப்படி நடித்தேன். இப்போது முன்னணி நடிகையாகி  இருக்கிறேன்.

இனி உடம்பை காட்டி நடித்துதான் இந்த இடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, நடிப்பு திறமையை காட்டும்  நடிகையாக இருக்கவே விரும்புகிறேன். அந்த கோணத்தில்தான் இப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதிக  பணத்துக்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேர மாட்டேன்” என்றார்.

Similar News