சினிமா
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா?: கங்கை அமரன் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா? என்ற கேள்விக்கு நல்ல முடிவு வரும் என ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தண்டையார்பேட்டையில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ரஜினிகாந்த் சந்திப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- பா.ஜனதா வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும் எனக்கு செல்போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரிடம் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அதன்படி நேற்று முன்தினம் அவரை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கேள்வி:- பா.ஜனதாவில் ரஜினிகாந்த் சேர வேண்டும் என்று அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அது பற்றி பேசினாரா?
பதில்:- நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’ தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்.
கேள்வி:- இதை எப்படி எடுத்துக்கொள்வது?
பதில்:- அவர் நேரடியாக தெரிவிப்பது.
கேள்வி:- சினிமாத்துறையில் இருந்து உங்களை ஆதரித்து யாரும் பிரசாரம் செய்வார்களா?
பதில்:- இப்போதே சொன்னால் ஆர்வம் குறைந்துவிடும். நிறையபேர் பிரசாரம் செய்ய வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேள்வி:- ரஜினிகாந்த் சந்திப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- பா.ஜனதா வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும் எனக்கு செல்போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரிடம் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். அதன்படி நேற்று முன்தினம் அவரை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கேள்வி:- பா.ஜனதாவில் ரஜினிகாந்த் சேர வேண்டும் என்று அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அது பற்றி பேசினாரா?
பதில்:- நீங்கள் பார்ப்பது ‘டிரெய்லர்’ தான். ‘மெயின் பிக்சர்’ தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்.
கேள்வி:- இதை எப்படி எடுத்துக்கொள்வது?
பதில்:- அவர் நேரடியாக தெரிவிப்பது.
கேள்வி:- சினிமாத்துறையில் இருந்து உங்களை ஆதரித்து யாரும் பிரசாரம் செய்வார்களா?
பதில்:- இப்போதே சொன்னால் ஆர்வம் குறைந்துவிடும். நிறையபேர் பிரசாரம் செய்ய வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.