சினிமா

காதலனுடன் ஓடிப்போன மாணவி கர்ப்பிணியான பரிதாபம்: சினிமாவை குறை கூறியதால் சென்சார் போர்டுக்கு வந்த சிக்கல்

Published On 2017-03-21 09:31 GMT   |   Update On 2017-03-21 09:31 GMT
சென்சார் போர்டுக்கு பள்ளி மாணவி கூறிய குற்றச்சாட்டால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
மயிலாடுதுறையில் 12 வகுப்பு பள்ளி மாணவி ஒருத்தி கடந்த வருடம் மே மாதம் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். தனது மகள் காணாமல் போய்விட்டதாக அவளுடைய பெற்றோர் போலீஸ் நிலையத்திலும் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசாரும் அந்த மாணவியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினர்.

இந்நிலையில், அந்த மாணவி கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காதலனுடன் பிடிபட்டாள். காதலனுடன் பிடிபட்டபோது, அவள் 3 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறாள். அவளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, அந்த மாணவி தான் நிறைய தமிழ் சினிமா பார்ப்பதாகவும், அதைப் பார்த்தே தனது காதலுடன் ஓடிச்சென்றதாகவும் கூறியிருக்கிறாள்.



இதைக்கேட்ட நீதிபதி டென்ஷனாகி, சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்த மாணிவியின் குற்றச்சாட்டை பதிவு செய்து, சினிமாவை பார்த்து இளைஞர்கள் கெட்டுப்போகும் அளவுக்கா ஒரு படத்தை தணிக்கை செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதற்கு சென்சார் போர்ட்டு உயரதிகாரிகள் மார்ச் 27-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Similar News