சினிமா

சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறிய காளி வெங்கட்

Published On 2017-03-21 03:41 GMT   |   Update On 2017-03-21 03:41 GMT
சிரிப்பு போலீசில் இருந்து சீரியஸ் போலீசாக மாறியுள்ளதாக நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தனக்குரிய தனித்துவமான நகைச்சுவை மூலம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் காளி வெங்கட்.  கடைசியாக அவர் நடிப்பில் வெளியான `எனக்கு வாய்த்த அடிமைகள்', `கட்டப்பாவ காணோம்' படத்திலும் அவரது காமெடிகள்  ரசிகர்களை கவரும்படி இருந்தது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `முண்டாசுப்பட்டி'. விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா,  காளி வெங்கட், முனீஷ்காந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.



இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' போன்ற கதைக்களத்தில், போலீஸ் அதிகாரியாக காளி வெங்கட் நடிப்பதாக தகவல்கள்  வெளியானது. இந்த தகவல்கள் குறித்து நடிகர் காளி வெங்கட் கூறியதாவது,

முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் இணைந்த இயக்குநர் ராம், விஷ்ணு, முனிஸ்காந்த் உடன் தான் மீண்டும் இணைந்து புதிய  படத்தில் நடித்து வருவதாக கூறினார். ஆனால் இப்படம் `முண்டாசுப்பட்டி' கதைக்களம் போன்று இல்லாமல் முற்றிலும்  மாறுபட்டதாக இருக்கும். இதற்கு முன்பு தான் காமெடி போலீசாக நடித்திருந்தேன். ஆனால் இப்படத்தில் ஒரு சீரியசான, அதிரடி  போலீஸ் அதிகாரியாக வருவதாக கூறினார். மேலும் முனிஸ்காந்தும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெறுங்கி உள்ளதாகவும், இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பாக்டரி  நிறுவனம் தயாரித்து வருவதாகவும் கூறினார்.

Similar News