சினிமா

கார்த்தியின் `தீரன் அதிகாரம் ஒன்று' ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்: ஒளிப்பதிவாளர் சத்யன்சூரியன்

Published On 2017-03-11 05:34 GMT   |   Update On 2017-03-11 05:34 GMT
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் `தீரன் அதிகாரம் ஒன்று' படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் சத்யன்சூரியன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் `காற்று வெளியிடை' படம் ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம்  இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நேற்று வெளியான  இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அது ஒருபுறம் இருக்க. கார்த்தி தற்போது `சதுரங்க வேட்டை' புகழ் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து  வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, பூஜ்  பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படபிடிப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



யதார்த்தமான படப்பிடிப்பு தளமாக இருப்பதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்த முடிவு செய்ததாக கூறிய ஒளிப்பதிவாளர் சத்யன்  சூரியன், படத்தின் முக்கியமான காட்சிகளையும் அப்பகுதியிலேயே படமாக்கி வருகிறார்.

மேலும் ஆக்சன் காட்சிகளை பூஜ் பகுதியில் பரபரப்பாக எடுக்க உள்ளனர். இதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட்  அமைப்பில் ஒரு "ஹை வே" ஆக்சன் காட்சி ஒன்றும் படமாக்கப்படவுள்ளது. அங்கு படமாக்கப்படும் அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு  விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறியுள்ளார்.



இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும்  இப்படத்தில் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை  தயாரிக்கின்றனர்.

Similar News