சினிமா

திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: நடிகை பாவனா பேட்டி

Published On 2017-03-10 05:45 GMT   |   Update On 2017-03-10 05:45 GMT
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பியபோது கடத்தி பாலியல் கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டார். மேலும் அந்த காட்சி செல்போனிலும் படம் பிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி  பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 8 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சில நாட்கள்  அதிர்ச்சியில் இருந்த சகஜநிலைக்கு திரும்பி மலையாள படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.



இந்தநிலையில் நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று திருச்சூரில் உள்ள பாவனா வீட்டில்  நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

இதில் பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மஞ்சுவாரியார் கலந்து கொண்டார். மேலும் இருவீட்டாரின் மிக  நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கன்னடத்தில் `ரோமியோ' என்ற படத்தில் நான் நடித்தபோது அதன் தயாரிப்பாளர் நவீனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக  மாறியது. கடந்த வருடமே நாங்கள் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தோம். எதிர்பாராதவிதமாக எனது தந்தை பாலச்சந்திரன்  மரணம் அடைந்ததால் எங்கள் திருமணம் தள்ளிப்போனது.



இப்போது எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நான் மன ரீதியாக தைரியமாகவே இருக்கிறேன். இந்த ஆண்டு  இறுதியில் எங்கள் திருமணம் நடைபெறும். திருமணத்துக்கு பிறகு பெங்களூரில் குடியேற திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு நான்  தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன்.



தற்போது நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். மலையாளத்தில் 3  படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் தற்போது நான் நடித்து வருகிறேன்.

திருமண நிச்சயதார்த்தத்தின் போது நவீன் எனக்கு வைர மோதிரத்தை அணிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News