சினிமா

சேவ் சக்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் வரலட்சுமி: நடிகர், நடிகைகள், பொதுமக்கள் ஆதரவு

Published On 2017-03-08 09:13 GMT   |   Update On 2017-03-08 09:13 GMT
வரலட்சுமி இன்று தொடங்கிய சேவ் சக்தி கையெழுத்து இயக்கத்துக்கு நடிகர், நடிகைகள், பொதுமக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடும் விதத்தில் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை வரலட்சுமி சமீபத்தில் ஆரம்பித்தார். இந்த அமைப்பு மூலம், தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை அதிகப்படுத்தவேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

உலக மகளிர் தினமான இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் வரலட்சுமி தலைமையிலான சேவ் சக்தி அமைப்பினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஷால், பிரசன்னா, நடிகைகள் தன்ஷிகா, சினேகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் பங்கேற்றுள்ளார்கள்.



மேலும், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்த கையெழுத்து இயக்கத்துக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார். 

Similar News