சினிமா

அனுஷ்காவால் தாமதமாகும் பாகுபலி-2 டிரைலர்

Published On 2017-02-28 11:10 GMT   |   Update On 2017-02-28 11:10 GMT
‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் அனுஷ்காவால் தாமதமாவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘பாகுபலி-2’ படம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டர் சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. ஆனால் ‘பாகுபலி-2’-ன் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு காரணம் அனுஷ்கா என்று கூறப்படுகிறது.

‘பாகுபலி’ முதல் பாகத்தில் ஒல்லியாக இருந்த அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார். இதனால் குண்டாகி விட்டார். ‘பாகுபலி-2’ படத்திலும் முதல் பாகத்தைப்போல அனுஷ்கா இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கால அவகாசம் கொடுத்தார்.



படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி விட்டு அனுஷ்கா தொடர்பான காட்சிகளை தாமதமாக எடுத்தார். அதற்குள் உடல் எடையை குறைத்து விடுவேன் என்று கூறிய அனுஷ்கா எடையை குறைக்க எடுத்த முயற்சிகள் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. எனவே வேறு வழியில்லாமல் குண்டு அனுஷ்காவை வைத்தே ‘பாகுபலி-2’-ஐ ராஜமவுலி படமாக்கினார்.



இதில் அவரது உருவத்தை கிராபிக்ஸ் மூலம் ஒல்லி ஆக்கி இருக்கிறார்கள். இதற்கான கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால்தான் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் வெளியாக காலதாமதம் ஆகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவும் ஒரு காரணம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கும் ராஜமௌலி, ‘டிரைலர் தாமதத்துக்கு இது மட்டும் காரணம் அல்ல’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.

Similar News