சினிமா
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்.

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்

Published On 2017-02-27 06:09 GMT   |   Update On 2017-02-27 07:22 GMT
படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார். இதுகுறித்து மேலும் விரிவாக பார்க்கலாம்...
நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பதினருடன் திருப்பதி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் நடிகை கீர்த்தி சுரேசை கண்டு இளைஞர்கள், பெண்கள் குரல் எழுப்பியடி கையசைத்தனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார்.


அவர் கூறுகையில்:- தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் நான் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இதற்கான நேர்த்தி கடனாக ஏழுமலையானை தரிசனம் செய்தேன். தரிசனம் நன்றாக இருந்தது என்றார்.

Similar News