சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் மகேஷ் பாபு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
‘கத்தி’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மகேஷ் பாபு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் மகேஷ் பாபு இரட்டை வேடத்தில் நடிப்பதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும், இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும், அவருக்கு தம்பியாக நடிகர் பரத் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காவிட்டாலும், ‘சம்பவாமி’ என்ற தலைப்பை படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக ப்ரணிதி சோப்ரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.