சினிமா

சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்த ராகாவா லாரன்ஸ்

Published On 2017-02-20 07:16 GMT   |   Update On 2017-02-20 07:16 GMT
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர பக்தனான ராகவா லாரன்ஸ் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதற்காக அழைப்பு விடுத்தார் என்பதை கீழே பார்க்கலாம்.
உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயின் பாசம் அதிகம். நமக்கு எத்தனையோ உறவுகள் இருந்தாலும்தாயின்  அன்புக்கு ஈடு ஏதும் இல்லை. 10 மாதங்கள் சுமந்து குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் படும் கஷ்டங்கள் ஏராளம். அந்த  பாசத்திற்கு எதையும் ஈடாக்க முடியாது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அது  என்னவென்றால், தனது தாய்க்கு அவர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர பக்தனான ராகவா லாரன்ஸ், தனது அம்மாவின் கோவில் திறப்பு விழாவிற்கு சூப்பர் ஸ்டார்  ரஜினிக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள லாரன்ஸ்,

"எனது அம்மாவுக்கு கட்டிய கோவிலை விரைவில் திறக்க உள்ளதாகவும், அதற்கு நண்பர்கள், ரசிகர்கள் அனைவரது  வாழ்த்துக்களும் தேவை என்றும் கூறிய லாரன்ஸ், அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு தலைவர் ரஜினியை நேரில் சந்தித்து  அழைத்ததாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்".

தற்போயை சூழலில் ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தனது ரசிகனும் தன்னிடம்  நெருக்கமானவருமான லாரன்சின் அம்மா கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க  வேண்டும். லாரன்சின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Similar News