சினிமா

பாலமுரளி கிருஷ்ணா மனைவி மரணம்: இன்று மாலை உடல் தகனம்

Published On 2017-02-17 07:49 GMT   |   Update On 2017-02-17 07:49 GMT
பாடகர் பால முரளி கிருஷ்ணாவின் மனைவி நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
மறைந்த கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா. இவரது மனைவி அன்ன பூரணா. 82 வயதாகும் இவர் கடந்த சில  மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று பிற்பகல் அவர் வீட்டில் மரணம் அடைந்தார்.

இன்று காலை 8 மணிக்கு மயிலாப்பூர் கதீட்ரல் சாலையில் உள்ள வீட்டில் தொடங்கியது. அதன் பிறகு மயிலாப்பூர் சுடுகாட்டில்  உடல் தகனம் செய்யப் படுகிறது.

பாலமுரளிகிருஷ்ணா - அன்னபூர்ணா தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள் களும் உள்ளனர். அன்ன பூர்ணாவுக்கு 14 வயதிலேயே  பாலமுரளி கிருஷ்ணாவுடன் திருமணம் நடந்தது.

பாலமுரளி கிருஷ்ணா 3 மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார். அதன் பிறகு இவரது உடல் நிலையும் மோசம்  அடைந்தது.

இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.

Similar News