சினிமா

ஜல்லிக்கட்டு பேராட்டத்தால் விஜய்யின் `பைரவா' வசூல் குறைந்ததா?

Published On 2017-01-24 01:58 GMT   |   Update On 2017-01-24 01:58 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விஜய்யின் `பைரவா' படத்தின் வசூல் சற்றே குறைந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12-ந் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்தததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘பைரவா’ வெளியாகிய முதல் வாரத்தில் நல்ல வசூலைப் பெற்றிருந்த நிலையில், 2-வது வாரத்தில் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சென்னையில் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. மேலும் சென்னையில் கடந்த 20 முதல் 22-ம் தேதி வரை 23 திரைகளில் `பைரவா' 280 முறை திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் `பைரவா' வசூல் சற்று குறைந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை சென்னையில் மட்டும் `பைரவா' படம் ரூ.5.7 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய `துருவங்கள் பதினாறு' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரையரங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்படத்தக்கது.

Similar News