சினிமா

மாணவர்கள் மீதான தாக்குதல் நல்ல முடிவை தராது: கமல்

Published On 2017-01-23 06:59 GMT   |   Update On 2017-01-23 06:59 GMT
தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கமல், மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசாரின் வலுக்கட்டாய நடவடிக்கை தவறானது. மேலும் மாணவர்களின் மீதான இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல் நல்ல முடிவை தராது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் `அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பித்தக்கது.

Similar News