சினிமா

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு விஜய் வசந்த் செய்த உதவி

Published On 2017-01-23 03:22 GMT   |   Update On 2017-01-23 03:22 GMT
ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராக்காரர்களுக்கு நடிகர் விஜய் வச்ந்த் உதவி செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் 7வது நாளாக இன்றும் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், பிரபலங்கள் என எந்த பாகுபாடும் இன்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் அறவழிப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

மேலும் சினமா பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், ஒரு சில நடிகர்கள் களத்தில் இறங்கியும் வேலை செய்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் வசந்த்தும் இதில் இணைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு உதவியாக விஜய் வசந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து 10 மொபைல் டாய்லெட்களை மெரினாவில் நிறுவியுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்களுக்கு தேவைாயான மற்ற உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் விஜய் வசந்த் சார்பில் கூறியுள்ளார்.

Similar News