சினிமா

மெரீனா போராட்டத்தில் குழந்தைக்கு பெயர் வைத்த லாரன்ஸ்

Published On 2017-01-20 07:25 GMT   |   Update On 2017-01-20 07:25 GMT
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைக்கு லாரன்ஸ் பெயர் வைத்தார். இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இளைஞர்களுடன் போராடி வருகிறார்.

மணவர்களுக்கு தேவையான மொபைல் டாய்லெட், குளுகோஸ், செல்போன் சார்ஜர் போன்ற பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு `தமிழ் அரசன்' என்று பெயர் வைத்தார்.

Similar News