சினிமா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம்

Published On 2017-01-19 12:02 GMT   |   Update On 2017-01-19 12:02 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை மவுன-உண்ணாவிரத போராட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தின் உணர்வுக்காக நாளை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Similar News