சினிமா

ரிலீசான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த பைரவா

Published On 2017-01-17 06:26 GMT   |   Update On 2017-01-17 06:26 GMT
விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் ரிலீசான நான்கு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12-ந் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்தததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘பைரவா’ வெளியாகி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் படக்குழுவினர் விளம்பரம் செய்துள்ளனர். நான்கே நாட்களில் ‘பைரவா’ படம் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளது பெரிய சாதனையாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘கைதி எண் 150’ படமும் ரிலீசான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 150-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News