சினிமா

விஜய்க்கு 150 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்

Published On 2017-01-12 08:42 GMT   |   Update On 2017-01-12 08:42 GMT
விஜய்யின் பைரவா படத்திற்கு அவரது ரசிகர்கள் 150 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
விஜய்யின் ‘பைரவா’ படம் இன்று உலகமெங்கிலும் வெளியாகியுள்ளது. சாதாரண நாட்களில் விஜய் படம் வெளிவந்தாலே கொண்டாடி மகிழும் விஜய் ரசிகர்கள், பொங்கல் வெளியீடாக இப்படம் வெளிவந்துள்ளதால் வழக்கத்தைவிட அதிகப்படியான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

சென்னையில் சில திரையரங்குகளில் முதல்நாள் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கே திரையிடப்பட்டது. நடுங்கும் குளிரிலும் திரையரங்குகளில் பைரவா படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. தங்களது அபிமான நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதற்கெல்லாம் பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் 150 அடி உயரத்தில் விஜய்க்கு கட் அவுட் வைத்து தங்களது மாஸை காட்டியுள்ளனர். திருநெல்வேலி ராம் திரையரங்கில் இதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தனர்.

இன்று பைரவா படம் ரிலீசானதும் 150 அடி உயரத்தில் விஜய் நிற்பது போன்று கட்-அவுட் வைத்து அதற்கு மாலையும் போட்டு அழகு சேர்த்துள்ளனர். ஏற்கெனவே, விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்காக இதே திரையரங்கில் 140 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்ததே அதிகபடியாக இருந்தது. இப்போது, அவரது ரசிகர்களே அதை தகர்த்தெறிந்துள்ளனர்.

இதுவரை எந்தவொரு நடிகருக்கும் இவ்வளவு உயரத்தில் கட்-அவுட் வைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News