சினிமா

விவாகரத்து வழக்கு: நடிகை மலாய்கா அரோரா கான் - அர்பாஷ் கான் கோர்ட்டில் ஆஜர்

Published On 2016-12-02 05:43 GMT   |   Update On 2016-12-02 05:43 GMT
விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நடிகை மலாய்கா அரோரா கான், நடிகர் அர்பாஷ்கான் தம்பதி பாந்திரா குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான ‘உயிரே’ படத்தில் ‘தக்க தைய தைய தையா’ என்ற பாடலில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர், நடிகை மலாய்கா அரோரா கான். இவரது கணவர் நடிகர் அர்பாஷ் கான்.

இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தனர். இந்தநிலையில், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் பொருட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து 43 வயது நடிகை மலாய்கா அரோரா கான் விலகினார்.

மேலும், கணவன்- மனைவி இருவரும் பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவாகரத்து கோரி பாந்திரா குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இந்த வழக்கின் விசாரணைக்காக மேற்படி இருவரும் கடந்த 29-ந் தேதி குடும்பநல கோர்ட்டில் ஆஜராகியது தெரியவந்து உள்ளது. அப்போது முதல்கட்டமாக அவர்களுக்கு நீதிபதி முன்னிலையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு மே மாதம் நீதிபதி தள்ளிவைத்தார்.

நடிகை மலாய்கா அரோரா கான், நடிகர் சல்மான்கானுக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News