சினிமா

மீண்டும் ரிலீஸ் ஆகும் அஜித்தின் வேதாளம்

Published On 2016-11-04 09:39 GMT   |   Update On 2016-11-04 09:39 GMT
அஜித்தின் ‘வேதாளம்’ படம் மீண்டும் ரிலீஸ் ஆகப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வேதாளம்’. இப்படம் அஜித் இதுவரை நடித்து வெளிவந்த அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழ் திரையுலக வரலாற்றிலும் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், ‘வேதாளம்’ படத்தை மறுபடியும் சென்னையில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

‘வேதாளம்’ படம் வெளிவந்து ஒரு வருடம் ஆவதையொட்டி மறுபடியும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ‘வேதாளம்’ படம் கடந்த வருடம் தீபாவளியையொட்டி நவம்பர் 10-ந் தேதி வெளிவந்தது. வருகிற நவம்பர் 10-ந் தேதியோடு ‘வேதாளம்’ படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக மறுபடியும் ‘வேதாளம்’ படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சென்னை புறநகரில் அமைந்துள்ள ‘ரோகிணி’ திரையரங்கில் ஒரெயொரு காட்சிக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுவென நடந்து முடிந்துள்ள நிலையில், மேலும் மூன்று காட்சிகள் ‘வேதாளம்’ படத்தை திரையிட திரையரங்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத சூழ்நிலையில், மறுபடியும் ‘வேதாளம்’ படம் ரிலீஸ் ஆவது அஜித் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. அதனை வெகுவிமரிசையாக கொண்டாடவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Similar News