சினிமா

குருட்டுத்தனமாக, முதல் பார்வையிலேயே காதல்வசப்பட மாட்டேன்: அனுஷ்கா சர்மா

Published On 2016-10-26 10:47 GMT   |   Update On 2016-10-26 10:47 GMT
குருட்டுத்தனமாகவும் முதல் பார்வையிலேயும் யார்மீதும் காதல்வசப்பட மாட்டேன் என அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனுஷ்கா சர்மா கூறியதாவது:-

கடலைபோடும் விவகாரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை காதலிப்பதாக இருந்தால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். நான் யதார்த்தமானவள். குருட்டுத்தனமாகவும், முதல் பார்வையிலேயும் யார்மீதும் காதல்வசப்பட்டுப் போய்விட மாட்டேன்.

என்மீது யாரும் காதல்வசப்பட்டதாக எனக்கு தெரியவந்ததில்லை. அவர்கள் (இளைஞர்கள்) அறிவிப்பு அட்டையில் தங்களது காதலை தெரிவிக்க வேண்டிவரும்.

அவ்வளவு சுலபமாக யார்மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. கல்லூரியில் என்னுடன் படித்தவர்களுக்கு சிலர்மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்ட போதெல்லாம் அவர்களுக்கு என்னவோ நேர்ந்து விட்டது என்று நினைத்து கொள்வேன்.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹார்டி மிகவும் கவர்ச்சிகரமான நடிகராக தெரிகிறார். பாலிவுட் நடிகர்களில் எனக்கு தெரிந்தவர்களாக யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News