சினிமா

இசையமைப்பாளராக மாறிய பாடலாசிரியர்

Published On 2016-10-25 06:13 GMT   |   Update On 2016-10-25 06:13 GMT
பாடலாசிரியர் ஒருவர் இசையமைப்பாளராக மாறியுள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
‘என்றுமே ஆனந்தம்’, ‘அன்புள்ள துரோகி’, ‘கிழக்கு சந்து கதவு எண் 108’, ‘அன்னம்’, ‘ஏழாம் பிறை’ உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் மா.சிவசங்கர். இவர் ‘நட்பதிகாரம் 79’ படத்தில் எழுதிய ‘பெண்ணே நீ காதல் வலை விரிக்கிறாய்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் பிரபல வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவின் ‘கனவுகள்’ ஆல்பம் மூலமாக பாடல்கள் எழுதி பலருடைய பாராட்டுதலையும் பெற்றவர்.

பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் வலம்வரும் மா.சிவசங்கர் தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். கிருஷ்ணகிரி ருக்மணி இயக்கத்தில் உருவாகும் ‘நான் வேற மாதிரி’ படத்தில் இரண்டு பாடல்களை எழுதி, இசையமைக்கவும் செய்திருக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மேற்பார்வையை கே.ஆர்.எஸ்.ஜவஹர் மேற்கொள்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு, சேலம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதநாயகனாக சூரியா சந்திரனும், கதாநாயகியாக சமிதாவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. 

Similar News