ரன்பிர் கபூரை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்
ரன்பிர் கபூர்- ஐஸ்வர்யா ராய் இருவரும் கரண்ஜோகர் இயக்கிய ‘ஏ தில் ஹை முஸ்க்’ படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். இது அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை அந்த படத்தில் இருந்து நீக்க முயற்சி நடந்தது. இந்த படத்தில் நடித்ததால் ஐஸ்வர்யா ராய்க்கும், அமிதாப் குடும்பத்துக்கும் மோதல் என்றெல்லாம் இந்தி படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபற்றி விதம் விதமான செய்திகள் வெளியாகின. இணைய தளங்களிலும், டி.வி.களிலும் காரசார விவாதங்கள் நடந்தன. இதன் பிறகும் ஐஸ்வர்யாராயும் ரன்பிர் கபூரும் சேர்ந்து பிலிம்பேர் பத்திரிகைக்கு நெருக்கமாக போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.
இதற்கிடையே இதற்கும் ஒருபடி மேலே சென்று ஐஸ்வர்யாராய் அளித்துள்ள பேட்டி இது.... ‘‘ஒருநாள் ரன்பிர் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அபிஷேக் பச்சனிடம் இருப்பது போன்ற சட்டையும், தொப்பியும் அணிந்திருந்தார். அப்போது எனது மகள் ஆரத்யா தனது அப்பா என்று நினைத்து அவரை கட்டிப்பிடித்தார். ரன்பிருக்கும் அபிஷேக் போன்று லேசான தாடி வேறு இருந்தது. பின்னர் தவறாக கட்டிப் பிடித்ததை அறிந்து ஆரத்யா சிரித்தாள். அவளுக்கு ரன்பிர் கபூர் என்றால் மிகவும் பிடிக்கும்’’.
இந்த பேட்டி என்ன புயலை கிளப்ப போகிறதோ?