சினிமா

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சுனுலட்சுமியை காப்பாற்றிய நீச்சல் வீரர்கள்

Published On 2016-10-15 02:44 GMT   |   Update On 2016-10-15 02:44 GMT
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சுனுலட்சுமியை நீச்சல் வீரர்கள் காப்பாற்றினார்கள். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
பவித்ரன் டைரக்டு செய்து வரும் ‘தாராவி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் நடந்தது. அங்குள்ள ஒரு அருவியில் கதாநாயகி சுனுலட்சுமி குளிப்பது போன்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுனுலட்சுமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சில நீச்சல் வீரர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பாய்ந்து சென்று சுனுலட்சுமியை காப்பாற்றி கரை சேர்த்தார்கள்.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படக்குழுவினர் அவசரம் அவசரமாக படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து வேறு இடத்துக்கு புறப்பட்டு சென்றார்கள்.

Similar News