சினிமா
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
சாந்தனுக்கு வேதனை கொடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அவரிடம் அடாவடி செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
நடிகரும், இயக்குனர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கும் தொகுப்பாளினி கீர்த்திக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், இவர்கள் நேற்று நள்ளிரவு 2.20 மணியளவில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் காரில் சென்றுள்ளனர்.
அப்போது, ரோந்து பணியில் போக்குவரத்து போலீசார் இவர்கள் பயணித்த காரை நிறுத்தி, காரில் அமர்ந்திருந்த சாந்தனுவை தரக்குறைவாக பேசியுள்ளார். போலீசாரின் நடவடிக்கை, அவர் மது அருந்தியதுபோல இருந்ததாக சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சாந்தனு பயணித்த காரை அவரது ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். எதற்காக அந்த போலீசார் சாந்தனு காரை நிறுத்தினார் என்பதை சாந்தனு தெரிவிக்கவில்லை. போலீசாரின் அடாவடியால் தான் மிகவும் வேதனைப்பட்டதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.
அப்போது, ரோந்து பணியில் போக்குவரத்து போலீசார் இவர்கள் பயணித்த காரை நிறுத்தி, காரில் அமர்ந்திருந்த சாந்தனுவை தரக்குறைவாக பேசியுள்ளார். போலீசாரின் நடவடிக்கை, அவர் மது அருந்தியதுபோல இருந்ததாக சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சாந்தனு பயணித்த காரை அவரது ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். எதற்காக அந்த போலீசார் சாந்தனு காரை நிறுத்தினார் என்பதை சாந்தனு தெரிவிக்கவில்லை. போலீசாரின் அடாவடியால் தான் மிகவும் வேதனைப்பட்டதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.