சினிமா

திருட்டு டிவிடியை தடுக்க ‘ரெமோ’ பட தயாரிப்பாளரின் துணிச்சலான முடிவு

Published On 2016-10-01 10:14 GMT   |   Update On 2016-10-01 10:14 GMT
திருட்டு டிவிடியை தடுக்க ரெமோ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன்- கீர்த்திசுரேஷ் நடித்துள்ள படம்‘ரெமோ’.பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இதை ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். இது வருகிற 7-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

வழக்கமாக தமிழ் நாட்டில் படம் வெளியாவதற்கு முந்தையநாள் வெளிநாடுகளில் ‘பிரிமியர் ஷோ’ நடத்தப்படும். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆனால் இந்த காட்சியின் போது தான் புதிய படம் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் படம் ரிலீஸ் ஆகும் நாளில் இணையதளங்களில் வெளியாகிறது. திருட்டு டி.வி.டியும் ‘பிரிமியர் ஷோ’ மூலம் தான் தயாரிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

எனவே, வருமானம் போனாலும் பரவாயில்லை. வெளிநாடுகளில் ‘ரெமோ’ பிரிமியர் காட்சிகளை நடத்துவது இல்லை என்று இதன் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். வருகிற 7-ந்தேதி தமிழ்நாட்டில் தான் ‘ரெமோ’வின் முதல் காட்சி திரையிடப்படும். இதன் மூலம் படம் முன்னதாக இணையதளத்தில் வெளியாகாது. திருட்டு டி.வி.டி.யும் தயாராகாது என்று நம்பி தயாரிப்பாளர் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.

Similar News