சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக சிக்ஸ் பேக் வைக்கும் எஸ்.ஜே.சூர்யா

Published On 2016-09-25 09:53 GMT   |   Update On 2016-09-25 09:53 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்திற்காக எஸ்.ஜே.சூர்யா சிக்ஸ் பேக் உடற்கட்டு வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக, ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்யவிருக்கிறாராம்.

ஏற்கெனவே, தமிழ் நடிகர்களில் சூர்யா, விக்ரம், அருண் விஜய், பரத், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் சிக்ஸ் பேக் உடற்கட்டு வைத்து படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் வரிசையில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவும் சிக்ஸ் பேக் உடற்கட்டு வைத்து சினிமாவில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 

Similar News