சினிமா
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
‘குற்றம் கடிதல்’ படத்தில் நடிகை ஜோதிகா மூத்த நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் இருவருடனும் போட்டிபோட்டு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘36 வயதினிலே’ படத்துக்கு பிறகு ‘குற்றம்கடிதல்’ பிரம்மா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வேடம். இந்த படத்தில் துணிச்சலான பெண்ணாக ஜோதிகா நடிப்பதற்கு அவருக்கு சூர்யா சமீபத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி கொடுத்தார்.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் அனுபவ நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். அவர்களும் தைரியம் மிகுந்த பெண்களாகவே இதில் வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் போட்டி போட்டு நடிப்பதால் இது ரசிகர்களால் பேசப்படும் படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் அனுபவ நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். அவர்களும் தைரியம் மிகுந்த பெண்களாகவே இதில் வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் போட்டி போட்டு நடிப்பதால் இது ரசிகர்களால் பேசப்படும் படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.