சினிமா

விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய பரிசு

Published On 2016-09-23 08:24 GMT   |   Update On 2016-09-23 08:24 GMT
விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் ஒருவர் மிகப்பெரிய பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அது என்ன பரிசு? அந்த தயாரிப்பாளர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘தர்மதுரை’. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘ஆண்டவன் கட்டளை’ படம் இன்று வெளிவந்துள்ளது. ‘காக்கா முட்டை’ இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார். ஸ்ரீகிரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இப்படத்தின் டிரைலரே அனைவரும் வியக்கும்படி இருந்தது.

இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஒருமுறை முழுவதும் பார்த்துள்ளனர். அப்போது விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்த தயாரிப்பாளர் அன்புசெழியன் விஜய் சேதுபதிக்கு உடனடியாக தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதோடு, இப்படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News