சினிமா

காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு

Published On 2016-09-07 06:48 GMT   |   Update On 2016-09-07 06:48 GMT
சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வந்த வடிவேலு தற்போது காமெடியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...

சுராஜ் இயக்கத்தில் விஷால்-தமன்னா நடித்துள்ள படம் ‘கத்தி சண்டை’. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேல் மீண்டும் இந்த படத்தில் காமெடியில் கலக்குகிறார். சூரியும் அவருடன் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலை நடந்து வருகிறது. இந்த படத்தில் வடிவேலு தனது ‘காமெடி’ காட்சிகளில் தீவிர கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். இவரது காட்சிகளுக்கான ‘டப்பிங்’கிலும் முழு ஈடுபாடு காட்டுகிறார்.

தனது டப்பிங் காட்சிகளுக்கு உற்சாகமாக வசனம் பேசி இருக்கிறார். தன்னுடன் நடித்த மற்ற காமெடி நடிகர்கள் சிறப்பாக வசனம் பேச வேண்டும் என்பதால் அவர்கள் ‘டப்பிங்’ பேசுவதை அருகில் இருந்து கண்காணித்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Similar News