சினிமா

தனுஷ் பட இயக்குனர்களின் புது முடிவு

Published On 2016-08-30 08:01 GMT   |   Update On 2016-08-30 12:33 GMT
தனுஷ் பட இயக்குனர்களான வெற்றிமாறன், கவுதம் மேனன், பாலாஜி மோகன் மூன்று பேரும் இணைந்து புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்கள். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதேபோல், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாரி’ படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன், இவர்களைப்போல் தற்போது தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன்.

தனுஷை வைத்து படம் இயக்கிய, இயக்கிக் கொண்டிருக்கும் இவர்கள் மூவரும் சேர்ந்து தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்களாம். அதாவது, பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வரவிருக்கிறார்களாம். இவர்கள் கூட்டணியாக அமைந்து சின்னத்திரை தொடர் ஒன்றை எடுக்கவிருக்கிறார்களாம்.

இதற்காக தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர். விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது. கவுதம்மேனன் ஏற்கெனவே, பார்த்திபனை வைத்து துப்பறியும் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். பின்னர் சில காரணங்களால், அந்த தொடர் பாதியிலேயே நின்றுபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News