சினிமா

உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்

Published On 2016-08-01 03:30 GMT   |   Update On 2016-08-01 03:30 GMT
உதயநிதி அடுத்ததாக நடிக்கப்போகும் புதிய படத்தில் அவருக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
உதயநிதி தற்போது சுசீந்திரன் மற்றும் கௌரவ் இயக்கும் பெயரிடப்படாத படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் எந்த படத்தில் முதலில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் எழில் இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடிக்க ஒப்பந்தமானார்.

சுசீந்திரன், கௌரவ் படங்களில் இதுவரை உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், தற்போது எழில் இயக்கும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ ஆகிய படங்களில் ரெஜினா கஸாண்ட்ரா, மற்றும் சிருஷ்டி டாங்கே இருவரையும் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கௌரவ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் உதயநிதியுடன் சூரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஒரேகட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Similar News