சினிமா

அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்

Published On 2016-07-25 00:02 GMT   |   Update On 2016-07-25 00:02 GMT
அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கபாலி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னர், கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து திடீரென சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர் ஓய்வு எடுப்பதற்காக தான் அமெரிக்கா சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கபாலி படத்தையும் அவர் அமெரிக்காவில் தான் பார்த்தார்.

இந்த நிலையில் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் வழியாக ரஜினிகாந்த் நேற்று இரவு 8.40 மணிக்கு சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் வருவதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் நிருபர்கள் பேட்டி கேட்க முயன்றனர். ஆனால் அவருடன் இருந்த பாதுகாவலர்கள் நிருபர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். உடனே காரில் ஏறிய ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்.

ரஜினிகாந்த் வருகையால் சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News