சினிமா

பிரியா ஆனந்தை அப்செட்டாக்கிய கபாலி

Published On 2016-07-23 06:52 GMT   |   Update On 2016-07-23 06:52 GMT
‘கபாலி’ படம் பலரை ஆனந்தப்படுத்திய போதிலும் நடிகை பிரியா ஆனந்தை மிகவும் அப்செட்டாக்கியுள்ளதாம். அது என்ன என்பதை கீழே பார்ப்போம்..
‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். இவர் தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். இப்படம் இவர் நடிக்கும் முதல் மலையாளப் படமாகும்.

இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருவதால், பிரியா ஆனந்த் கேரளாவில் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வெளியான கபாலி படத்தை முதல் நாள் முதல்காட்சி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் பிரியா ஆனந்தை மிகவும் அப்செட்டாக்கியுள்ளது.

டுவிட்டரில் அவரது நண்பர்கள் எல்லோரும் ‘கபாலி’ படத்தை பார்த்துவிட்டதாக பதிவு செய்வதை பார்த்ததும், தனக்கு படக்குழு ‘கபாலி’ படத்தை பார்ப்பதற்கு விடுமுறை அளிக்கவில்லையே என்பது குறித்து மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பிரியா ஆனந்த் நடித்துள்ள ‘முத்துராமலிங்கம்’ படத்தில் அவர் பள்ளி மாணவியாக நடித்துள்ளார். ராஜதுரை என்பவர் இயக்கியுள்ளார். பழைய நடிகர்கள் கார்த்திக், நெப்போலியன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

Similar News